சமீபத்தில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. எதற்காக இந்த வாழ்த்து?
பல படுதோல்விகளை கொடுத்தாலும் பாரதிராஜா என்றால் பரபரக்கதான் செய்கிறது தமிழ் சினிமா. அவரது இயக்கத்தில் நடிக்க எல்லா நடிகர்களுக்கும் விருப்பம் உள்ளது.
இந்நிலையில் அடுத்து இயக்கப் போகும் தென்கிழக்குச் சீமையிலே, குற்றப்பரம்பரை இரண்டும் தனது கனவுப் படங்கள் என அவர் அறிவித்ததால் அதில் நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு அமையும் என கோடம்பாக்கமே உற்று கவனித்து வந்தது.
இந்நிலையில் தனுஷை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து கதை சொன்னார் பாரதிராஜா. கதையிலும், பாரதிராஜாவின் அழைப்பிலும் உருகிப் போன தனுஷ் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.
இந்தத் தகவலை அவர் ரஜினியிடம் பகிர்ந்து கொண்டபோது, நல்ல முடிவு கண்டிப்பாக நன்றாக வரும் என வாழ்த்தியிருக்கிறார்.