ஞாயிறு, 30 மே, 2010
சூர்யா - கார்த்தியுடன் கைகோர்க்கும் சன் குழுமம்
செவ்வாய், 25 மே, 2010
சித்திக்கின் அடுத்த குண்டு விஜய்க்கு பில்டப் சாங் இல்லை!
ஸ்ரீதேவியின் மகளை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்தும் இயக்குநர் சசிகுமார்
ஞாயிறு, 23 மே, 2010
விஜய்யும் மகேஷம் ஒன்னா?
வெள்ளி, 21 மே, 2010
விஜய் படங்களுக்குத் தடையா?
வியாழன், 20 மே, 2010
விஜய் என்ன செய்ய வேண்டும்?
புதன், 19 மே, 2010
மருமகனுக்கு ரஜினி வாழ்த்து
4 மணி நேரம் நடிக்க ரூ. 40 லட்சம் வாங்கிய ஜெனிலியா
திங்கள், 17 மே, 2010
குப்பையான படங்களில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை : அஜீத்
அஜீத் நடிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால்தான் அவர் ரேஸ் பக்கம் திரும்பி விட்டார் என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில்,
'உண்மையைச் சொல்லணும்னா... நான் நடிச்ச அனைத்துப் படங்களிலும் என்னுடைய 100 சதவிகித உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். அதில் பல படங்கள் தோல்வியுற்றதில் எனக்கு வருத்தம்தான். இதுக்கு மேலேயும் நான் குப்பையான படங்களில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இன்றைய சூழ்நிலையில் திரையரங்குக்கு வந்து சினிமா பார்க்கிறதுங்கிறது ரொம்ப செலவு பிடிக்கற விஷயமாகிவிட்டது. நிறைய காசு செலவு செய்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் குப்பையான படங்களை விரும்ப மாட்டாங்க.
அதனால் மட்டமான படங்களில் நடிப்பதை விட வீட்டில் உட்காரது மேல்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன். நான் மனசு வச்சா வருடத்துக்கு 200 நாள்கள் கால்ஷீட் கொடுத்து கோடிக்கோடியா சம்பாதிக்கலாம். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அஜீத்தை பொறுத்தவரைக்கும் தன்னுடைய மனசுக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வான். அதுதான் சந்தோஷம் கூட' என்றவர் தொடர்ந்து,
'சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும் நல்ல படமா நடிப்பேன்' என்று சொல்லியிருக்கிறார் அஜீத்.
'தல'யைப் போல 'தளபதி'யும் திருந்திட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்?
திருமண நிகழ்ச்சிக்கு புதுமண தம்பதி போல் வந்த பிரபுதேவா-நயன்தாரா
திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதிபோல் நயன்தாராவும் பிரபுதேவாவும் பங்கேற்றனர். பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது.
மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கி கைகோர்த்தபடி வந்தார்கள். மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
இருவரையும் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர். குணசித்திரநடிகர் ஒருவர் கூறும் போது பிரபுதேவா, நயன்தாரா நடவடிக்கைகள் ஒரு புதுமண தம்பதியைபோல் இருந்தது என்றார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண கூட்டத்தினர். கிசுகிசுத்தனர். கேரளாவில் பொது நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பங்கேற்பது இதுவே முதல்முறை.
ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர். நயன்தாராவை அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் மிரட்டி இருந்தார். அதனால் சில மாதங்கள் ரகசியமாக சந்தித்த அவர்கள் சென்னை விழாவில் ஒன்றாக ஆடியது பரபரப்பை எற்படுத்தியது.
பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அமெரிக்கா, பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுற்றி பார்த்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். இரு வீட்டாரையும் சமரசப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
நயன்தாரா படிப்படியாக சினிமாவில் நடிப்பதை குறைக்கிறார். நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஒப்புக்கொள்ளவில்லை
தமிழில் நடித்த ஆதவன் படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் எலக்ட்ரா என்ற படத்தில் நடிக்கிறார். மனிஷா கொய்ராலாவும் பிரகாஷ்ராஜும் அவருக்கு தாய் தந்தையாக நடிக்கின்றனர். வேறு படங்கள் இல்லை. இவற்றை முடித்து விட்டு முழு நேர குடும்பவாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம். தனி குடித்தனம் நடத்த புதிதாக வீடு பார்க்கிறார்கள்.
சனி, 15 மே, 2010
சித்திக் வீட்டு கல்யாணம் : செல்ல விரும்பாத விஜய்
விஜய் ரசிகர்களின் கடிதம்...
வியாழன், 13 மே, 2010
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்
லெதர் டிரஸ் கௌபாய் ஹீரோக்களை மறுபடியும் உலவ விட்டு, நெஞ்சுக்குள் ஒரு ஃபெதர் டச் கொடுத்திருக்கிறார் சிம்புதேவன். தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு தனிக்குதிரை சவாரி செய்யும் இவருக்கு கௌபாய் ஸ்டைலில் ஒரு 'டுமீல்....!'
இரும்புக்கோட்டையை சேர்ந்த கிழக்கு கட்டை, தனக்கு கீழே சில ஊர்களை அடிமையாக வைத்திருக்கிறான். அவனின் அடக்குமுறையை எதிர்த்து போராடுகிறான் முரட்டுசிங்கம். யாருக்கு வெற்றி என்பதுதான் ஒருவரி கதை. இதற்காக சிம்புதேவன் உருவாக்கிய உலகம் இருக்கிறதே, வாரே வாவ்...! ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம், அங்கேயிருக்கிற அசோகன் போன்ற அந்தகால வில்லன் சிலைகள், 'இங்கு குரல்வளை நெரிக்கப்படும்' என்ற வாசகத்தோடு இயங்கும் து£க்குமேடை, பாஸ்மாக் கடை போர்டில், குடி குடியை ரேப் பண்ணும் என்று எழுதியிருப்பது, இப்படி திரும்புகிற திசையெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் சிம்புதேவனின் கற்பனை, வசனங்கள் என்று வரும்போது சமுதாய பிரச்சனைகளை 'வாருவதற்கும்' தவறவில்லை. லேசாக ஒரு சந்து கிடைத்தால் போதும், கூராக ஒரு ஆணியை செருகி அதிர வைக்கிறார் மனுஷன்!
வைரத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு து£க்கில் தொங்க விடப்படுகிற சிங்காரத்தை காப்பாற்றுகிறது மூவர் குழு. இவரை போலவே தோற்றம் உள்ள சிங்கத்தை கடவுளாக நினைக்கிறது ஊர். கொஞ்ச நாள் சிங்கமாக நடிங்க என்பதுதான் சிங்காரத்துக்கான அசைன்மென்ட். சிங்கம் எப்படியிருப்பான்? அவன் நிழலை விட வேகமா இருப்பான் என்று சொன்னால் போதாது என்று விஷ§வலாக காட்டுகிறார்களா, தியேட்டரில் சிரிப்படங்க வெகுநேரம் ஆகிறது.
அப்படியே செவ்விந்திய கூட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிற சிங்கம், அங்கு 'மனித ப்ரை' ஆக்கப்படுகிற அந்த கடைசி நிமிடத்தில் பண்ணுகிற அலப்பறைக்கு தனியாக ரூம் போட்டே சிரிக்கலாம். (வைதேகி காத்திருந்தாள் படத்தையும் விட்டு வைக்கலேங்க) 'வாராயோ தோழி வாரோயோ' பாடலை செவ்விந்திய மொழியில் பாடுவதற்கெல்லாம் தனி தில்லு வேணும் சாரே! இறுதியாக புதையல் தேடி புறப்படுகிறது இந்த கௌபாய் கூட்டம். வில்லன், காமெடியன், ஹீரோ, என்று கிளம்பும் இந்த முப்படை இறுதியாக புதையலோடு வர, அதை இரும்புக்கோட்டை கிழக்கு கட்டை லபக்கி கொள்ள க்ளைமாக்ஸ் ஃபைட்!
சிங்காரமாகவும், சிங்கமாகவும் லாரன்ஸ். அப்பாவித்தனம் அசால்ட்டாக வருகிறது இவருக்கு. அதே நேரத்தில் காணாமல் போன சிங்கம் கேரக்டரை இன்னும் கொஞ்ச நேரம் காண்பித்திருந்தால் சற்று நிமிர்ந்து உட்கார்ந்திருக்கலாமோ? லட்சுமிராய், சந்தியா, பத்மப்ரியா என்று தலா ஒருவருடன் இவர் ஆடும் டூயட்டுகளும், காதல் சீன்களும் பெட் ரெஸ்ட் மாதிரி சீட் ரெஸ்ட்டுக்கு தள்ளுவது வேதனை. அந்த புண்ணியத்தை கட்டிக் கொள்வது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். ஒரு பாடலாவது தேற வேண்டுமே. ம்ஹ¨ம்!
செவ்விந்திய இனத் தலைவனாக வருகிற எம்எஸ்.பாஸ்கரும், அவரது பாஷையும் விறுவிறுப்பு ப்ளஸ் சிரிசிரிப்பு. இவர் பேசுவதை மட்டுமல்ல, உடல்மொழியையும் டிரான்ஸ்லேட் செய்யும் சாம்ஸ்... தியேட்டரையே துவம்சம் ஆக்குகிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அந்த கால நடிகர் வி.எஸ்.ராகவன் அலட்டிக்கொள்ளாமலே அதிர வைக்கிறார். 'ரெண்டு நாளைக்கு ஒரு தடவ போட்டுக்கலாமாம்' என்று அவர் அலுத்துக் கொள்கையில் படீர் சத்தம் தியேட்டரில்! நாசரின் அல்லக்கையாக வரும் சாய் குமார் பேசி பேசியே எரிச்சலுற வைத்தாலும், வினாடிக்கு வினாடி மாறும் அவரது முகபாவமும், குரலும் கவனத்தை ஈர்க்கிறது.
பதினெட்டாம் நு£ற்றாண்டை கண் முன்னே கொண்டு வந்திருப்பதில் தனிப்பெரும் அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார்கள் ஒளிப்பதிவாளர் அழகப்பன், காஸ்ட்யூமர் சாய், மற்றும் ஆர்ட் டைரக்டர் முத்துசாமி ஆகியோர்.
அரிவாளை தீட்டிக்கொண்டு அடிவயிற்றிலிருந்து அலறும் வில்லன்களையும், ஹீரோக்களையுமே பார்த்து தாயத்து கட்டாத குறையாக பீதியடைந்திருக்கும் தமிழனுக்கு, சிம்புதேவனின் இந்த கோட்டை, சரியான பொழுதுபோக்கு வேட்டை!
புதன், 12 மே, 2010
சிங்கம் படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!
சன் பிக்சர்ஸ் வழங்கும் "சிங்கம்" ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. சிங்கம் படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'துரைசிங்கம்'. ஹரியின் முந்தைய படமான சாமி போல் இந்தப் படமும் பெரிதும் பேசப்படும் என பட வட்டாரங்கள் கூறகின்றன. மேலும் சூர்யாவின் போலீஸ் கதாபாத்திரம் மற்ற படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரத்தை விட மிகவும் சுவரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் ஹரியிடம் சிங்கம் படத்தை பற்றி கேட்டோம்.
சிங்கம் அவ்வளவு சீக்கிரத்துல பாயாது. பாய்ஞ்சுதுன்னா, எதிராளிய காலி பண்ணிட்டு தான் வரும். அப்படியான கேரக்டர்தான் சூர்யாவுக்கு. சிங்கம் ஒரு அடி அடிச்சா, ஒன்றரைடன் வெயிட்டு இதுதான் படத்துல சூர்யா பேசுற பஞ்ச். விதவிதமான கோணத்துல சூர்யா தெரிவார். கிராமம், நகரம்,
மாநகரம்ங்கற மூμ ஏரியாவுல கதை பயணிக்கும். இதுதான், இப்படித்தான் இருக்கும்னு எந்த காட்சியையும் யூகிக்க முடியாத திரைக்கதை, படத்துக்கு பலமா இருக்கும் என்கிறார் ஹரி.
இதற்கிடையில் சிங்கம் படத்தின் பாடல் நாளை வெளியீடப்படுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளளார். படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் வழங்கும் "சிங்கம்" ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. சிங்கம் படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'துரைசிங்கம்'. ஹரியின் முந்தைய படமான சாமி போல் இந்தப் படமும் பெரிதும் பேசப்படும் என பட வட்டாரங்கள் கூறகின்றன. மேலும் சூர்யாவின் போலீஸ் கதாபாத்திரம் மற்ற படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரத்தை விட மிகவும் சுவரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் ஹரியிடம் சிங்கம் படத்தை பற்றி கேட்டோம்.
சிங்கம் அவ்வளவு சீக்கிரத்துல பாயாது. பாய்ஞ்சுதுன்னா, எதிராளிய காலி பண்ணிட்டு தான் வரும். அப்படியான கேரக்டர்தான் சூர்யாவுக்கு. சிங்கம் ஒரு அடி அடிச்சா, ஒன்றரைடன் வெயிட்டு இதுதான் படத்துல சூர்யா பேசுற பஞ்ச். விதவிதமான கோணத்துல சூர்யா தெரிவார். கிராமம், நகரம்,
மாநகரம்ங்கற மூμ ஏரியாவுல கதை பயணிக்கும். இதுதான், இப்படித்தான் இருக்கும்னு எந்த காட்சியையும் யூகிக்க முடியாத திரைக்கதை, படத்துக்கு பலமா இருக்கும் என்கிறார் ஹரி.
இதற்கிடையில் சிங்கம் படத்தின் பாடல் நாளை வெளியீடப்படுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளளார். படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
செவ்வாய், 11 மே, 2010
ஞாயிறு, 9 மே, 2010
பிரபல நிறுவனத்துடன் அஜித்குமார் ஒப்பந்தம்
உலகத் தரம் வாய்ந்த மோட்டார் கார் பந்தைய வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து நிர்வாகம் செய்யும் பிரபல நிறுவனம் EURASIA MOTOR SPORTS MANAGEMENT.அதன் இயக்குனர் PIERS-HONNIST. இருபைத்தந்து வருடங்களுக்கும் மேலாக இத்துறையில் தேர்ந்தவர் மட்டுமல்ல…முன்னாள் கார் பந்தைய வீரரும் ஆவார்.மோட்டார் கார் பந்தைய வீரர்களுக்கான பந்தைய நுணுக்கங்களை மட்டுமல்ல…அவர்களுடைய விளம்பர வணிகத்தையும் நிர்வாகம் செய்வதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் இது.
பிரபல கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயனின் F1 பங்களிப்பை தொடர்ந்து அவரது இதர பந்தயங்களையும் இவர்கள் தான் நிர்வகிக்கிறார்கள்.சமீபத்தில் இந்த நிறுவனம் அஜித்குமாருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த நிறுவனமே இனி அஜித்குமாரின் தொழில் ரீதியான மோட்டார் கார் பந்தயங்களை நிர்வகிக்கும்.
F2 போட்டி என்பது F1 க்கான கடைசி நுழைவுவாயில் என்பது குறிப்பிடத்தக்கது.2010 F1&F2 போட்டி ஏப்ரல் 16-ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள சில்வர்ஸ்டோன் நகரில் தொடங்கவிருக்கிறது.இதற்கான முன்னேற்பாடு குறித்து விவாதிக்கவும்,பயிற்சி எடுக்கவும் கடந்த 28-ஆம் தேதி இங்கிலாந்துக்கு கிளம்பி போயிருக்கிறார்.
எண் 28 உடன் கூடிய FMSCI சின்னத்துடன் போட்டியிடும் அஜித்குமார் தனது கனவை மட்டுமின்றி… சக இந்தியர்களான நரேன் கார்த்திகேயன்,அர்மன் இப்ராஹிம்,கருண் சந்தோக்,பார்த்திவ்சுரேஷ்வரன் ஆகியோரையும் ஊக்குவித்து… உற்சாகப்படுத்திய F1 அமைப்புக்கு இச்செயல் மூலம் நன்றி தெரிவிக்கிறார்.
அஜித்குமாருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சிகரமானது.அவருடைய ஆர்வமும்,உற்சாகமும் அவருடைய முயற்சிக்கு 110 சதவிகிதம் கை கொடுக்கும். F3 போட்டியில் கலந்து கொண்டு சிலவருட இடைவெளிக்குப் பிறகு இப்போது போட்டியில் பங்கெடுக்கிறார்.இருந்தாலும் இரண்டொரு சுற்றிலேயே அவருடைய வேகம் கூடும்…அவருடைய விடாமுயற்சியும் ஆர்வமும்…அவரை நிச்சயம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று சொல்கிறார் PIERS-HONNIST.
சனி, 8 மே, 2010
அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!
அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில் வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது.
இதனால் தனது 50வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், தனது 50 வது பட வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.
இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.
படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்தச் செய்தியை உங்களுக்கு முதலில் தெரிவிப்பது தட்ஸ்தமிழ் என்பதையும் நினைவில் கொள்ளவும்!
ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்
திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. ரெட் கார்டு போடுவோம் என்று மிரட்டின. பின்னர் திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
“எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது. கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்குவதை ஏற்க மாட்டோம்.
கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்…”, என்றார்.
முன்செல்ல