நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

செவ்வாய், 25 மே, 2010

சித்திக்கின் அடுத்த குண்டு விஜய்க்கு பில்டப் சாங் இல்லை!


ஹீரோவோட அறிமுக காட்சிக்கே தனியா ரூம் போட்டு யோசிக்கிறாங்க கோடம்பாக்கத்தில. பனைமரம் உசரத்துக்கு அவரை காட்டணும் என்பதற்காகவே பள்ளம் பறிச்சு கேமிராவை வைக்கிற பழக்கம்மெல்லாம் எந்த சிந்தனை சிற்பி(?) ஆரம்பிச்சு வைச்சாரோ? இதையாவது சகிச்சுக்கலாம், முதல்ல கால் நகத்தை காட்டுறது, அப்புறம் விரலை காட்றது, அப்புறம் காலுக்கு ஒரு குளோஸ் அப்! இப்படி முழு ரீல் முடிஞ்ச பிறகும் கூட ஹீரோ முகத்தை காட்டாம பில்டப் கொடுப்பதெல்லாம் கோடம்பாக்கம் தினந்தோறும் படிக்கிற கோனார் திரை உரை!.

அண்மையில் வந்த சுறா படத்தில் விஜய்யின் அறிமுக காட்சியை பற்றி பேசாத ரசிகனே இல்லை. அந்த பேச்சு எந்த ரகம் என்பது நமக்கு தேவையில்லாத விஷயம். அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகனுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க தயாராக இருந்தாராம் விஜய். அதை ஆரம்பத்திலேயே முறியடித்து ரசிகர்களுக்கு ஆனந்த செய்தியை கொடுத்திருக்கிறார் சித்திக்.

தனது அறிமுக காட்சிக்கு, தன்னை வியந்து ஒரு பாடல் இருந்தா நல்லாயிருக்கும் என்றாராம் விஜய். அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க வந்து நான் சொன்னதை மட்டும் செய்யுங்க என்றாராம் சித்திக். இப்படி ஒரு பதிலை கேட்ட பிறகும் பில்டப் சாங் கேட்டு பிரச்சனை செய்வாரா விஜய்? போகட்டும் என்று அமைதி காத்துவிட்டாராம். போற போக்கை பார்த்தா படம் நல்லாயிருக்கும் போலிருக்கே!