நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

ஞாயிறு, 27 ஜூன், 2010

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? -கண்டு பிடித்த கடைக்காரர்கள்!

மதுர மல்லி, மணப்பார முறுக்கு என்று ஊருக்கு பேர் சேர்த்த ஐட்டங்களுக்கெல்லாம் சவால் விடுவார்கள் போலிருக்கிறது நடிகைகள். நயன்தாரா ஜிமிக்கி, ரீமாசென் பவுடரு என்று கிராம புற கடைகளில் ஒரே பில்டப் சமாச்சாரங்கள்தான். 80 களில் நதியா தோடு, ஸ்ரீபிரியா மிடி என்று ஏகப்பட்ட ரவுசு பண்ணினார்கள் கடைக்காரர்கள்.


கொஞ்சம் லேட்டஸ்டாக யோசித்து குஷ்பு இட்லி என்ற ஒன்றை கண்டுபிடித்து கொண்டாடியது தமிழ்நாடு. இந்த வரிசையில் இப்போது புதிதாக ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். அது, சம்பந்தப்பட்ட நடிகையின் காதுவரை வந்திருப்பதால் நடிகை மட்டுமல்ல, அவங்க அம்மாவுக்கும் வாயே வாயில் புடவை நீட்டுக்கு விரிகிறது. வேறென்ன சிரிப்புதான்!

சமீபத்தில் மதுரை பக்கம் போன த்ரிஷாவின் கார் டிரைவர், அங்கு தொங்கிய விண்ணை தாண்டி வருவாயா புடவையை பார்த்து ஆடிப் போய்விட்டாராம். அப்படத்தில் ப்ளு கலரில் அவர் கட்டியிருந்த சேலையை அச்சு அசலாக பிரிண்ட் பண்ணி விண்ணை தாண்டி வருவாயா சேலை என்று விற்று தள்ளுகிறார்களாம். மக்களும் விண்ணை தாண்டுன பொடவைய கொடுங்க என்று வாங்கி த்ரிஷாவையே பீட் பண்ணிய சந்தோஷத்தில் நடையை கட்டியதை கண்ணார கண்டு அதை அப்படியே அம்மா வரைக்கும் கொண்டு போய்விட்டார்.

இதே படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கவுதம்மேனன். அங்கேயும் த்ரிஷாதான் ஹீரோயின். புடவை மேட்டரை கவுதம் காதுல போட்டு வைக்கணும் என்று தங்களுக்குள் பேசி தீர்மானமே போட்டிருக்கிறார்களாம் தாயும் மகளும்.

சனி, 19 ஜூன், 2010

அனுஷ்காவின் அழகு ரகசியம்

ரசிகர்களின் மனசுக்குள் ஐஸ் துகள்களை தூவியுள்ளது அனுஷ்காவின் அழகு. உயரம், உடற்கட்டு, நிறம் என அனுஷ்காவின் அழகில் த்ரி ரோசஸ் கலவை.
உங்கள் அழகின் ரகசியம் என்ன? நடிகைகளிடம் வழக்கம்போலவே கேட்கும் கேள்வியை அனுஷ்காவிடம் இறக்கி வைத்த போது இப்படி சொல்கிறார்.....

“என்னோட உயரம் பற்றி சொல்லாதவர்களே இல்லை. அதுதான் என் ப்ளஸ் ஆக இருந்தாலும் சில நேரங்களில் குட்டையாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணமும் வரும். தினமும் 40 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்கிறேன். யோகாவும் உண்டு. 8 மணிக்கு மேல் சாப்பிட மாட்டேன். எப்போதாவதுதான் அசைவ உணவுகள் சாப்பிடுவேன். சைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுவேன். வெஜிடேபிள்ஸ்தான் ஸ்கின்னுக்கு நல்லது. கண்ணுல வெள்ளரிக்காய் சிலைஸெல்லாம் வைக்கிறதைவிட தியானம் செய்வதுதான் பெட்டர். இதையெல்லாம் நான் ஃபாலோ பண்றதுகூட காரணமா இருக்கலாம்” என்ற அனுஷ்கா, எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியம் எங்க அப்பா –அம்மாதான் என கலாய்க்கிறார்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா

கமல் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் திரிஷா. மன்மதன் அம்பு என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.

எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.

எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு லீவு போட்டு நடித்தேன். மிஸ் சென்னை ஆன பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் வந்து மொய்த்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டுக்கு வந்து அழைத்தார். அவர் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது.

வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். என்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் படித்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை பார்த்து சிரிப்பேன்.

திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது சொல்கிறேன் என்றார் திரிஷா.

திரிஷா தாய் உமா கூறும்போது,

என் மகளுக்கு பிடித்தவரை மணக்கலாம். திரிசாவை கண்ணின் இமைபோல் பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வரவேண்டும் என்றார்.

அம்மாவாக நடிக்கும் சினேகா

மோகன்லாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள சினேகா, அந்தப் படத்தில் நடிக்கும் நாடோடிகள் புகழ் அனன்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.
மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாளத்தின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லையாம். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஷிகார் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக சினேகாவும் மகளாக நாடோடிகள் புகழ் அனன்யாவும் நடிக்கிறார்கள். அனன்யாவுக்கு அம்மா என்றதும் சற்றுத் தயங்கிய சினேகாவுக்கு, அந்த கேரக்டரின் தன்மையைச் சொன்னதும் பிடித்துப் போய் ஓகே சொல்லிவிட்டாராம். இந்தப் படம் தனது கேரியரில் முக்கிய இடம் பிடிக்கும் என்கிறார் சினேகா.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி ராய். அவர் திடீரென்று நீக்கப்பட்ட பிறகுதான் சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு செய்தி, அனன்யாவை தமிழில் அறிமுகப்படுத்திய சமுத்திரக்கனிதான், இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

வெள்ளி, 4 ஜூன், 2010

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா!

பொதுவாக பிறந்த நாளை கொண்டாடாமல் வெளியூர் கிளம்பிவிடும் ராஜா, இந்த முறை தனது ரசிகர்களின் அன்பு வேண்டுதலுக்காக சென்னையில் பிறந்த நாள் கொண்டாடினார்.
சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இன்று பிற்பகல் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்ஸி தலைவர் வி சி குகநாதன் உள்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவும் தனியாக கேக் வரவழைத்திருந்தார். அதையும் வெட்டினார் இளையராஜா.

முதல்வர் - ரஜினி வாழ்த்து!

முன்னதாக தமிழக முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோர் அவருக்கு போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

இளையராஜாவின் பிறந்த நாள் ஸ்பெஷல் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு வரும் ஜூன் 5-ம் தேதி அவரது மகள் பவதாரிணி ஏற்பாடு செய்துள்ளார். இதில் தமிழ், இந்தி பிரபல பாடகர்கள் பங்கேற்றுப் பாடுகிறார்கள். இளையராஜாவின் புகழ்பெற்ற நத்திங் பட் விண்ட் ஆல்பத்தை முழுவதுமாக பாடுகிறார்கள் பாடகர்கள்.