நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

ஞாயிறு, 27 ஜூன், 2010

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? -கண்டு பிடித்த கடைக்காரர்கள்!

மதுர மல்லி, மணப்பார முறுக்கு என்று ஊருக்கு பேர் சேர்த்த ஐட்டங்களுக்கெல்லாம் சவால் விடுவார்கள் போலிருக்கிறது நடிகைகள். நயன்தாரா ஜிமிக்கி, ரீமாசென் பவுடரு என்று கிராம புற கடைகளில் ஒரே பில்டப் சமாச்சாரங்கள்தான். 80 களில் நதியா தோடு, ஸ்ரீபிரியா மிடி என்று ஏகப்பட்ட ரவுசு பண்ணினார்கள் கடைக்காரர்கள்.


கொஞ்சம் லேட்டஸ்டாக யோசித்து குஷ்பு இட்லி என்ற ஒன்றை கண்டுபிடித்து கொண்டாடியது தமிழ்நாடு. இந்த வரிசையில் இப்போது புதிதாக ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். அது, சம்பந்தப்பட்ட நடிகையின் காதுவரை வந்திருப்பதால் நடிகை மட்டுமல்ல, அவங்க அம்மாவுக்கும் வாயே வாயில் புடவை நீட்டுக்கு விரிகிறது. வேறென்ன சிரிப்புதான்!

சமீபத்தில் மதுரை பக்கம் போன த்ரிஷாவின் கார் டிரைவர், அங்கு தொங்கிய விண்ணை தாண்டி வருவாயா புடவையை பார்த்து ஆடிப் போய்விட்டாராம். அப்படத்தில் ப்ளு கலரில் அவர் கட்டியிருந்த சேலையை அச்சு அசலாக பிரிண்ட் பண்ணி விண்ணை தாண்டி வருவாயா சேலை என்று விற்று தள்ளுகிறார்களாம். மக்களும் விண்ணை தாண்டுன பொடவைய கொடுங்க என்று வாங்கி த்ரிஷாவையே பீட் பண்ணிய சந்தோஷத்தில் நடையை கட்டியதை கண்ணார கண்டு அதை அப்படியே அம்மா வரைக்கும் கொண்டு போய்விட்டார்.

இதே படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கவுதம்மேனன். அங்கேயும் த்ரிஷாதான் ஹீரோயின். புடவை மேட்டரை கவுதம் காதுல போட்டு வைக்கணும் என்று தங்களுக்குள் பேசி தீர்மானமே போட்டிருக்கிறார்களாம் தாயும் மகளும்.