நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

ஞாயிறு, 6 ஜூன், 2010

எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா

கமல் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் திரிஷா. மன்மதன் அம்பு என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.

எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.

எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு லீவு போட்டு நடித்தேன். மிஸ் சென்னை ஆன பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் வந்து மொய்த்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டுக்கு வந்து அழைத்தார். அவர் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது.

வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். என்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் படித்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை பார்த்து சிரிப்பேன்.

திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது சொல்கிறேன் என்றார் திரிஷா.

திரிஷா தாய் உமா கூறும்போது,

என் மகளுக்கு பிடித்தவரை மணக்கலாம். திரிசாவை கண்ணின் இமைபோல் பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வரவேண்டும் என்றார்.