நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

சனி, 15 மே, 2010

சித்திக் வீட்டு கல்யாணம் : செல்ல விரும்பாத விஜய்


பாங்காக் போயிருக்கிறார் விஜய். இது இன்ப சுற்றுலாவாக இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. இது வேற வேற வேற....!

சுறா படத்தின் ரிசல்ட்டை அடுத்து முன்னணி பத்திரிகைகளில் வருகிற விமர்சனங்களும், அட்வைஸ் கடிதங்களும் விஜய்யை வெறுப்பேற்றி வருகின்றன. என்றாலும் இந்த ட்ரிப் அதற்கான வடிகால் அல்லவாம். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் காவல்காரன் படத்தின் இயக்குனர் சித்திக் மகளுக்கு கேரளாவில் திருமணம். உள்ளூரில் இருந்தால் அதற்கு போக வேண்டுமே? அதனால்தான் இந்த வெளிநாட்டு ட்ரிப் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். நடிக்கிற படத்தை, இயக்குகிற டைரக்டர் அழைத்தால் அவர் வீட்டு விசேஷத்துக்கு கூட போக முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை?

வேறொன்றுமில்லை. விஜய்யின் வழக்கமான பில்டப்புகள், பஞ்ச் டயலாக்குகளுக்கு ஒரு பஞ்ச் வைத்துவிட்டாராம் சித்திக். படப்பிடிப்பில் விஜய்யின் அட்வைஸ்களையும் கேட்பதில்லையாம். இதனால் வெறுப்புக்குள்ளான ஹீரோ, இந்த கல்யாண நேரம் பார்த்து பாங்காக் போய்விட்டாராம். இவர்தான் போகவில்லையே தவிர, தனது கள்ளக்காதலி நயன்தாரா சகிதம் இந்த விசேஷத்துக்கு போய்விட்டு வந்திருக்கிறார் பிரபுதேவா! அதுவும் போன உடனே கிளம்பாமல் அதிக நேரம் மணப்பந்தலில் இருந்தாராம்.

ஒரு வெற்றி வந்து கோபதாபங்களை மாற்றும். அதுவரைக்கும் விஜய்.... அமைதி அமைதி!