நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

திங்கள், 7 மார்ச், 2011

அனுஷ்கா, ஹன்சிகா இருவரையும் சமாளிப்பாரா தமன்னா?

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் ஹன்சிகா-அனுஷ்கா-தமன்னா மூவரும் பட வாய்ப்புகளை இழுக்க போட்டி போடுகிறார்கள்.
வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா நடிக்கும் போதே தமிழில் வரும் முக்கியமான வாய்ப்புகளை மறுக்காமல், நடிக்க சம்மதிக்கிறார்.

தனுஷ் உடன் நடிக்கும் 'மாப்பிள்ளை' படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் தமன்னா, தனக்கு பொருத்தமான ரோலை எதிர்பார்க்கிறார்.

மேலும், 'செக்ஸி லுக்' அனுஷ்கா-ஹன்சிகா மாதிரி கவர்ச்சியாக நடிக்க தமன்னா தயங்குவதால், இந்த கோலிவுட் நடிகைகளின் 'மார்க்கெட்' நிலவரத்தில் மாற்றம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

ஞாயிறு, 6 மார்ச், 2011

ஃபேஸ்புக்கில் ப்ரீத்திகா சாட்டிங்

தமிழில் சிக்கு புக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்த ப்ரீத்திகா, பேஸ்புக்கில் தனது நன்பர்களோடு பேசி மகிழ்கிறாராம்.
'சிக்கு புக்கு படத்தில் என் நடிப்பை பார்த்திட்டு உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் என்னுடன் உரையாடினார்கள்.

பாராட்டு மழையில் திக்கு முக்காட செய்து விட்டார்கள். ஹேப்பி டேஸ் படத்தில் நடித்த வருண் சந்தேஷ் நடிக்கும் லேட்டஸ்ட் படத்தில் நடிக்கிறேன்.

லவ் ஸ்டோரி, குடும்ப பொழுதுபோக்கு சித்திரம், படத்தை சரவன் இயக்குகிறார், நாயகியின் பார்வையில் விரியும் கதை இது.

நான் ஆவலாக எதிர்பார்த்த அம்சம் இதில் இருப்பதாக நினைக்கிறேன். ஹைதராபாத்தில் நடந்த போட்டோ சூட்டில் ஹீரோ வருண், நானும் நட்பில் இணைந்தோம்.

தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன.அதில் என்னை ஈர்த்தது எது என்று விரைவில் அறிவிப்பேன்'என்றாராம் ப்ரீத்திகா.

வெள்ளி, 26 நவம்பர், 2010

கமலஹாசனின் மகள் இலங்கை வாலிபனுடன் காதல்


கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார். இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன்(20) என்பவருடன் அக்ஷரா கடந்த ஒரு வருடமாக நட்புடன் பழகி வருவதாக தெரிகிறது. இந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது அவர்களது குடும்பத்துக்கே இப்போதுதான் தெரியவந்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இருவரும் வெளியில் ஜோடியாக செல்வதுடன், நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோவை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். அடிக்கடி நெட்டிலும் சாட் செய்து கொள்ளும் இவர்கள் அக்ஷு மற்றும் ஜேய்ன் என்ற புனைப்பெயர்களில் காதல் சம்பாஷணைகளை பரிமாறிக் கொள்வதாக தெரிகிறது.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

சினிமா சூட்டிங்கில் மயங்கி விழுந்தார் நயன்தாரா!

சினிமா சூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த நடிகை நயன்தாரா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படம் `பாஸ் என்ற பாஸ்கரன்'. இப்படத்தில்ஆர்யா கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். டைரக்டர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் சூட்டிங் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. நேற்று ஆர்யா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மதியம் 2 மணி அளவில் சூட்டிங்கில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்த அவருக்கு மயக்கம் தெளிவிக்கும் முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டார்கள். உடனடியாக டாக்டரும் வரவழைக்கப்பட்டார். நயன்தாராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அவர் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்தது தெரியவந்தது. மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை நேரத்துக்கு சாப்பிடும்படியும், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படியும், டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஞாயிறு, 27 ஜூன், 2010

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? -கண்டு பிடித்த கடைக்காரர்கள்!

மதுர மல்லி, மணப்பார முறுக்கு என்று ஊருக்கு பேர் சேர்த்த ஐட்டங்களுக்கெல்லாம் சவால் விடுவார்கள் போலிருக்கிறது நடிகைகள். நயன்தாரா ஜிமிக்கி, ரீமாசென் பவுடரு என்று கிராம புற கடைகளில் ஒரே பில்டப் சமாச்சாரங்கள்தான். 80 களில் நதியா தோடு, ஸ்ரீபிரியா மிடி என்று ஏகப்பட்ட ரவுசு பண்ணினார்கள் கடைக்காரர்கள்.


கொஞ்சம் லேட்டஸ்டாக யோசித்து குஷ்பு இட்லி என்ற ஒன்றை கண்டுபிடித்து கொண்டாடியது தமிழ்நாடு. இந்த வரிசையில் இப்போது புதிதாக ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். அது, சம்பந்தப்பட்ட நடிகையின் காதுவரை வந்திருப்பதால் நடிகை மட்டுமல்ல, அவங்க அம்மாவுக்கும் வாயே வாயில் புடவை நீட்டுக்கு விரிகிறது. வேறென்ன சிரிப்புதான்!

சமீபத்தில் மதுரை பக்கம் போன த்ரிஷாவின் கார் டிரைவர், அங்கு தொங்கிய விண்ணை தாண்டி வருவாயா புடவையை பார்த்து ஆடிப் போய்விட்டாராம். அப்படத்தில் ப்ளு கலரில் அவர் கட்டியிருந்த சேலையை அச்சு அசலாக பிரிண்ட் பண்ணி விண்ணை தாண்டி வருவாயா சேலை என்று விற்று தள்ளுகிறார்களாம். மக்களும் விண்ணை தாண்டுன பொடவைய கொடுங்க என்று வாங்கி த்ரிஷாவையே பீட் பண்ணிய சந்தோஷத்தில் நடையை கட்டியதை கண்ணார கண்டு அதை அப்படியே அம்மா வரைக்கும் கொண்டு போய்விட்டார்.

இதே படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கவுதம்மேனன். அங்கேயும் த்ரிஷாதான் ஹீரோயின். புடவை மேட்டரை கவுதம் காதுல போட்டு வைக்கணும் என்று தங்களுக்குள் பேசி தீர்மானமே போட்டிருக்கிறார்களாம் தாயும் மகளும்.

சனி, 19 ஜூன், 2010

அனுஷ்காவின் அழகு ரகசியம்

ரசிகர்களின் மனசுக்குள் ஐஸ் துகள்களை தூவியுள்ளது அனுஷ்காவின் அழகு. உயரம், உடற்கட்டு, நிறம் என அனுஷ்காவின் அழகில் த்ரி ரோசஸ் கலவை.
உங்கள் அழகின் ரகசியம் என்ன? நடிகைகளிடம் வழக்கம்போலவே கேட்கும் கேள்வியை அனுஷ்காவிடம் இறக்கி வைத்த போது இப்படி சொல்கிறார்.....

“என்னோட உயரம் பற்றி சொல்லாதவர்களே இல்லை. அதுதான் என் ப்ளஸ் ஆக இருந்தாலும் சில நேரங்களில் குட்டையாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணமும் வரும். தினமும் 40 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்கிறேன். யோகாவும் உண்டு. 8 மணிக்கு மேல் சாப்பிட மாட்டேன். எப்போதாவதுதான் அசைவ உணவுகள் சாப்பிடுவேன். சைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுவேன். வெஜிடேபிள்ஸ்தான் ஸ்கின்னுக்கு நல்லது. கண்ணுல வெள்ளரிக்காய் சிலைஸெல்லாம் வைக்கிறதைவிட தியானம் செய்வதுதான் பெட்டர். இதையெல்லாம் நான் ஃபாலோ பண்றதுகூட காரணமா இருக்கலாம்” என்ற அனுஷ்கா, எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியம் எங்க அப்பா –அம்மாதான் என கலாய்க்கிறார்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன் : திரிஷா

கமல் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் திரிஷா. மன்மதன் அம்பு என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.

எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.

எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு முதலில் யோசித்தனர். நான் பிடிவாதமாக இருந்ததால் என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் சம்மதித்தனர்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்கு லீவு போட்டு நடித்தேன். மிஸ் சென்னை ஆன பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் வந்து மொய்த்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டுக்கு வந்து அழைத்தார். அவர் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.
எனக்கு தைரியம், தன்னம்பிக்கை நிறைய உண்டு. அவை என் அம்மாவிடம் இருந்து வந்தவை. வீட்டில் என் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வேன். மற்ற அறைகள் அசுத்தமாக இருந்தாலும் கண்டுக்கமாட்டேன். இதனாலேயே அம்மா என் மேல் கோபப்படுவது உண்டு. எனக்கு சமையல் தெரியாது.

வீட்டில் இருந்தால் தியேட்டருக்கு குடும்பத்தோடு போய் படம் பார்க்க பிடிக்கும். நான் நடித்த படங்களை நிறைய தடவை திரும்ப திரும்ப பார்த்து இருக்கிறேன். என்னைப்பற்றி பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் படித்து ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை பார்த்து சிரிப்பேன்.

திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனக்கு கணவராக வருகிறவருக்கு நான் விரும்பும் லட்சணங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒருவரை பார்க்கும்போது சொல்கிறேன் என்றார் திரிஷா.

திரிஷா தாய் உமா கூறும்போது,

என் மகளுக்கு பிடித்தவரை மணக்கலாம். திரிசாவை கண்ணின் இமைபோல் பாதுகாக்கிறோம். அவரை புரிந்து கொள்பவர் கணவராக வரவேண்டும் என்றார்.

அம்மாவாக நடிக்கும் சினேகா

மோகன்லாலுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள சினேகா, அந்தப் படத்தில் நடிக்கும் நாடோடிகள் புகழ் அனன்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.
மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் சினேகா. ஆனால் மலையாளத்தின் இன்னொரு முன்னணி நடிகரான மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லையாம். இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஷிகார் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக சினேகாவும் மகளாக நாடோடிகள் புகழ் அனன்யாவும் நடிக்கிறார்கள். அனன்யாவுக்கு அம்மா என்றதும் சற்றுத் தயங்கிய சினேகாவுக்கு, அந்த கேரக்டரின் தன்மையைச் சொன்னதும் பிடித்துப் போய் ஓகே சொல்லிவிட்டாராம். இந்தப் படம் தனது கேரியரில் முக்கிய இடம் பிடிக்கும் என்கிறார் சினேகா.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி ராய். அவர் திடீரென்று நீக்கப்பட்ட பிறகுதான் சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு செய்தி, அனன்யாவை தமிழில் அறிமுகப்படுத்திய சமுத்திரக்கனிதான், இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.